இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மிதுன் ஹாட்ரிக்: விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றில் 252 ரன்கள் எடுத்த தமிழக அணி!

கடைசியில் தமிழக அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் மிதுன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார்...

News image
Updated On :25 அக்டோபர் 2019, 7:32 am

தமிழ்நாடு - கர்நாடகா அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்று ஆட்டம் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற கர்நாடக அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முரளி விஜய் ரன் எடுக்காமலும் அஸ்வின் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்துள்ளார்கள். ஆனால் அபினவ் முகுந்தின் அபார ஆட்டத்தால் சரிவிலிருந்து மீண்டது தமிழக அணி. 25 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. ஆனால் அடுத்தப் பாதி தமிழக அணிக்குச் சாதகமாக அமையவில்லை. அபினவ் முகுந்த் 85 ரன்களிலும் பாபா அபரஜித் 66 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு தமிழக அணியால் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. பதிலாக, தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால் பின்னடைவு ஏற்பட்டது.

விஜய் சங்கர் 38, ஷாருக் கான் 27 ரன்களும் எடுத்து ஓரளவு உதவினாலும் தமிழக அணியால் பெரிய ஸ்கோரை எட்டமுடியாமல் போனது. ஒரு கட்டத்தில் தமிழக அணி, 38-வது ஓவரின்போது 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. இதனால் தமிழக அணி 300 ரன்களைத் தொட முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 66 ரன்களில் பாபா அபரஜித் ரன் அவுட் ஆனதால் அது பெரிய சிக்கலாக அமைந்தது. கடைசியில் தமிழக அணி 49.5 ஓவர்களில் 252 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் மிதுன் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். கர்நாடக அணித் தரப்பில் மிதுன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.