பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஒலிம்பிக்ஸுக்கு இந்த கிரிக்கெட் தான் பொருத்தமாக இருக்கும்: சாஹித் அஃப்ரிடி கருத்து

அபுதாபி டி10 லீகில் அறிமுகமாகவுள்ள முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி, ஒலிம்பிக்ஸுக்கு டி10 கிரிக்கெட் தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

News image
Updated On :14 அக்டோபர் 2019, 9:16 am

அபுதாபி டி10 லீகில் அறிமுகமாகவுள்ள முன்னாள் வீரர் சாஹித் அஃப்ரிடி, ஒலிம்பிக்ஸுக்கு டி10 கிரிக்கெட் தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

பரபரப்பாக, விரைவாக நடைபெறுவதால் ரசிகர்களுக்கு டி10 கிரிக்கெட் ஆட்டம் மிகவும் பிடிக்கிறது. ஆட்டமும் 90 நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அபுதாபி டி10 லீக் போட்டி இந்த வகை கிரிக்கெட்டைப் பரிசோதிக்க சரியான களமாக இருக்கிறது. கிரிக்கெட்டை ஒலிம்பிக்ஸுக்குக் கொண்டு செல்ல டி10 ஆட்டம் உதவும். 

ஆரம்பத்தில் டி20 கிரிக்கெட்டையும் யாரும் ஏற்கவில்லை. ஆனால் இன்று டி20 உலகக் கோப்பை நடக்கிறது. எனவே எதிர்காலத்தில் அதிகமான சர்வதேச வீரர்கள் அபுதாபி டி10 லீகில் இடம்பெறுவார்கள் என்று கூறியுள்ளார். 

அபுதாபி டி10 லீக் போட்டி, ஐக்கிய அமீரகத்தில் நவம்பர் 14 முதல் 24 வரை நடைபெறவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.