பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

யு-18 உலக செஸ் சாம்பியன் ஆனார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா!

உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானத்தா யு-18 உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2019, 10:06 am

மும்பையில் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கிய 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானத்தா யு-18 உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளார்.

இந்தியா முதல்முறையாக உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துகிறது. 66 நாடுகளைச் சேர்ந்த 450 வீரர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். யு-14 போட்டி, யு-14 மகளிர் போட்டி, யு-16 போட்டி, யு-16 மகளிர் போட்டி, யு-18 போட்டி, யு-18 மகளிர் போட்டி ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் 14 வயதைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, யு-18 பிரிவில் போட்டியிட்டார்.

கடைசி சுற்றுக்கு முன்பு வரை முன்னணியில் இருந்த பிரக்ஞானந்தா, இன்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் வேலண்டினை எதிர்கொண்டார். டிரா செய்தால் போதும் என்கிற நிலையில் ஆட்டத்தை டிரா செய்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆகியுள்ளார் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியில் அவர் 7 ஆட்டங்களில் வெற்றியடைந்து, நான்கு ஆட்டங்களை டிரா செய்தார். 

12 வயது 10 மாதம், 13 நாள்களில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன பிரக்ஞானந்தா, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றார். எனினும் சென்னையைச் சேர்ந்த மற்றொரு இளம் செஸ் வீரர் குகேஷ், 12 வயது ஏழு மாதம் 17 நாள்களில் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி, பிரக்ஞானந்தாவின் சாதனையைப் பின்னுக்குத் தள்ளினார். இந்நிலையில் தற்போது யு-18 உலக சாம்பியன் ஆகியுள்ளார் பிரக்ஞானந்தா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.