மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளுக்கு இரு மடங்குப் புள்ளிகள்: விராட் கோலி பரிந்துரை!

டெஸ்ட் அணியில் தனக்கு ஏன் இடமில்லை என்று குல்தீப் யாதவுக்குத் தெரியும். அணிக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்றுதான்...

News image
Updated On :9 அக்டோபர் 2019, 10:23 am

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

2-வது டெஸ்ட் புணேவில் வியாழன் முதல் தொடங்குகிறது. செய்தியாளர்களை இன்று சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

புள்ளிகள் பட்டியலைத் தயாரிக்க என்னைச் சொன்னால், வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிகளுக்கு இரு மடங்குப் புள்ளிகளை வழங்கப் பரிந்துரைப்பேன். முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு இதை அமல்படுத்தலாம். ஒவ்வொரு டெஸ்ட் வெற்றிகளுக்கும் புள்ளிகள் வழங்கப்படுவதால் டிராவுக்குப் பதிலாக வெற்றியை அடையவே அணிகள் விரும்பும். இது டெஸ்ட் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நல்லது. 

ரோஹித் சர்மாவைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டாம். அவர் தன் திறமையை நிரூபித்துவிட்டார். எனவே அவர் தனது பேட்டிங் திறமையை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்த அனுமதியுங்கள். வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களை அவர் எந்தளவுக்கு ரசித்து ஆடுகிறாரோ அதுபோல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடட்டும்.

டெஸ்ட் அணியில் தனக்கு ஏன் இடமில்லை என்று குல்தீப் யாதவுக்குத் தெரியும். அணிக்காக நம்மால் என்ன செய்ய முடியும் என்றுதான் எல்லோரும் எண்ணுகிறார்கள். குல்தீப்புக்கும் அதேபோலத்தான். இந்தியாவில் அஸ்வின், ஜடேஜாவுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை அவர் அறிந்து வைத்துள்ளார். இவர்கள் இருவரும் பேட்டிங்கிலும் அணிக்காகப் பங்களிக்கிறார்கள் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.