பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

டி10 போட்டியில் சதத்தைத் தவறவிட்ட கிறிஸ் லின்: காரணம் என்ன?

டி20 போட்டியில் சதமடித்தாலே அது ஒரு பெரிய சாதனைதான். டி10 போட்டியிலும் அது சாத்தியமா?

News image
Updated On :19 நவம்பர் 2019, 10:57 am

டி20 போட்டியில் சதமடித்தாலே அது ஒரு பெரிய சாதனைதான். டி10 போட்டியிலும் அது சாத்தியமா?

அதிர்ஷ்டம் இருந்திருந்தால் அதைச் சாத்தியப்படுத்தியிருப்பார் கிறிஸ் லின். 

அபு தாபியில் நேற்று நடைபெற்ற டி10 போட்டியில் கிறிஸ் லின் பங்கேற்ற மராத்தா அராபியன்ஸ் 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் குவித்தது. இதன்பிறகு விளையாடிய டீம் அபு தாபி அணி, 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டும் எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

29 வயது லின், 30 பந்துகளில் 7 சிக்ஸர்களும் 9 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு டி10 போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் எடுத்த 87 ரன்கள் தான் அதிகபட்சமாக இருந்தது. அந்தச் சாதனையை லின் முறியடித்துள்ளார். 

இன்னிங்ஸின் கடைசி 18 பந்துகளில் நான்குப் பந்துகள் மட்டுமே எதிர்கொண்டார் லின். அதனால் தான் அவரால் சதமடிக்க முடியாமல் போனது. கடைசி ஓவரின்போது 87 ரன்களில் இருந்தார். எனினும் அந்த ஓவரின் கடைசிப் பந்தை விளையாட மட்டுமே லின்னுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் பவுண்டரி அடித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.