ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

டி20 போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இரு கர்நாடக வீரர்கள் கைது!

இந்த வருட கர்நாடக பிரீமியர் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் கர்நாடக வீரர்கள்...

News image

கெளதம் (படம்: @KPLKSCA/Twitter)

Updated On :7 நவம்பர் 2019, 5:56 am

இந்த வருட கர்நாடக பிரீமியர் லீக் போட்டியின் இறுதிச்சுற்றில் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் கர்நாடக வீரர்கள் சிஎம் கெளதம், அப்ரார் கஸி ஆகிய இரு வீரர்களும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

பெல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சிஎம் கெளதமும் அதே அணியைச் சேர்ந்த கஸியும் இறுதிப் போட்டியில் நிதானமாக விளையாடுவதற்காக தலா ரூ. 20 லட்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் போட்டியில் டஸ்கர்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. மேலும் பெங்களூரு பிளாஸ்டர் அணிக்கு எதிராக ஃபிக்ஸிங்கில் இருவரும் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது இருவரும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முன்னாள் கர்நாடக வீரர்களான இருவரும் தற்போது அணி மாறியுள்ளார்கள். கெளதம் கோவா அணிக்கும் கஸி மிஸோரம் அணிக்கும் விளையாடி வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டியில் நான்கு வருடங்கள் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கெளதம், பிறகு 2013-ல் தில்லி அணிக்குத் தேர்வானார். பிறகு மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தேர்வானார். இதுவரை 13 ஐபிஎல் ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார். நாளை தொடங்கவுள்ள சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில் அவரவர் மாநில அணியில் கெளதம், கஸி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளார்கள். 

சமீபத்தில் மற்றொரு கேபில் வீரரான நிஷாந்த் சிங், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக சிஎம் கெளதம், அப்ரார் கஸி ஆகிய இரு வீரர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.