கூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

ஐபிஎல் போட்டியில் இனி தொடக்க விழா கிடையாது: உயரதிகாரக் குழுக் கூட்டத்தில் முடிவு!

கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடக்க விழாவில் ஆர்வம் காட்டுவது கிடையாது...

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:00 pm

எழில்

மும்பையில் ஐபிஎல் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் ஐபிஎல் உயரதிகாரக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முந்தைய தொடா்களில் நோ பால்கள் கணிப்பதில் நடுவா்கள் செயல்பாடுகள் விமா்சனத்துக்கு ஆளாகின. இப்பிரச்னை தொடா்பாக குழுக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. ஐபிஎல் 2020 சீசன் தொடரில் நோ பால்களைக் கண்காணிக்க சிறப்பு நடுவரை நியமிக்க அதன் உயரதிகாரக் குழு முடிவு செய்துள்ளது. 

மேலும் அடுத்த வருடத்திலிருந்து ஐபிஎல் தொடக்க விழாவை ரத்து செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடக்க விழாவில் ஆர்வம் காட்டுவது கிடையாது. தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு அதிகச் சம்பளம் தரவேண்டியுள்ளது. இப்படித் தொடக்க விழாவுக்காகச் செலவு செய்வதன் மூலம் ஏராளமான பணமும் வீணாகிறது. இக்காரணங்களால் இனிமேல் ஐபிஎல் போட்டியில் தொடக்க விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ நிர்வாக அதிகாரி ஒருவர், ஆங்கில நாளிதழுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.