/

விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இடம்பெற வாய்ப்பு: சஞ்சய் பாங்கர்

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:13 am

Raghavendran

இந்தியா, நியூஸிலாந்து இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரையில், கே.எல்.ராகுல் துவக்க வீரராக களமிறங்குகிறார். எனவே நடுவரிசையில் விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் இடம்பெற வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்தப் போட்டியில் வேறு சில மாற்றங்கள் செய்யவும் திட்டமிட்டுள்ளோம். 

ஷிகர் தவன் நிலை குறித்து அடுத்த 10 அல்லது 12 நாட்களில் தெரிந்துவிடும். ஷிகர் தவன் போன்ற ஒரு வீரரின் நிலை குறித்து அவசரமாக முடிவெடுப்பதற்குப் பதிலாக சிறிய கால அவகாசத்துக்குப் பின்பு முடிவெடுப்பது சரியானதாக இருக்கும்.

எனவே மாற்று வீரரை தேர்வு செய்வது தொடர்பாக அப்போது ஆலோசிக்கப்படும். இருப்பினும் உடனடியாக ஒரு வீரர் அறிவிக்கப்பட்டு அவர் நேரடியாக களமிறங்குவதற்கு பதிலாக மாற்று வீரர் முன்கூட்டியே அணியுடன் இணைந்து பயற்சிபெறுவது மிகச்சிறந்ததாக இருக்கும்.

இங்கிலாந்தில் போட்டி என்றாலே இதுபோன்ற மழை இடையூறுகள் ஏற்படுவது எல்லாம் முன்பே தெரிந்தது தான். இந்தப் போட்டியில் மழை பாதிப்பு இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியா 2 போட்டிகளை முழுமையாக விளையாடியுள்ளது அதிர்ஷ்டவசமானது தான் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.