தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

10 ஆண்டுகளில் ஆஸி. ஓபன் காலிறுதிக்கு முதன்முறையாக முன்னேறிய ஆஸி. வீராங்கனை!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி தகுதி பெற்றார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:55 am

Raghavendran

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி தகுதி பெற்றார்.

மிகவும் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், ரஷியா முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி இடையிலான 4-ஆவது சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் செட்டை 4-6 என ஷரபோவா கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லி, 6-1, 6-4 என அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி வெற்றிபெற்றார்.

இதன்மூலம் ஆஸி. ஓபனில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் ஆஸி. வீராங்கனை என்ற சாதனையை ஆஷ்லி படைத்தார். இதையடுத்து காலிறுதிப் போட்டியில் மற்றொரு முன்னணி வீராங்கனையான பெட்ரா க்விடோவாவை எதிர்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.