தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஆஸி. 300-க்கு ஆல்-அவுட்: இந்தியா ஃபாலோ ஆன் அழைப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 6:48 am

Raghavendran

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கியது. 

இப்போட்யில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193, ரிஷப் பந்த் 159 ரன்களை குவித்தனர். 

தொடர்ந்து ஆடிய ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்தினார். இந்திய அணி ஆஸி.யை விட 322 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஃபாலோ ஆன் அழைப்பு விடுத்துள்ளது.

போட்டியின் இடையே மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தில் அவ்வப்போது தடை ஏற்பட்டு வருகிறது.

கடந்த 1947-48-இல் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி இதுவரை ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. தற்போது அந்த சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.