அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விக்கெட்டுகள், அதிரடி சிக்ஸர், நடுவர் சர்ச்சை ஆகியவற்றுக்கிடையே 158 ரன்கள் எடுத்த நியூஸிலாந்து அணி!

விக்கெட்டுகள், சிக்ஸர், பவுண்டரிகள், மூன்றாம் நடுவர் சர்ச்சை என ஒரே இன்னிங்ஸில் அனைத்து விதமான சுவைகளையும்...

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:05 am

DIN

விக்கெட்டுகள், சிக்ஸர், பவுண்டரிகள், மூன்றாம் நடுவர் சர்ச்சை என ஒரே இன்னிங்ஸில் அனைத்து விதமான சுவைகளையும் தந்துள்ளது இந்த டி20 ஆட்டம்!

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி தோற்றும் இதில் யாரையும் நீக்கவில்லை. அதே அணியுடன் களமிறங்கியது இந்திய அணி.

முதல் இரு ஓவர்கள் வரை ஒரு பவுண்டரியும் அடிக்கப்படவில்லை. மூன்றாவது ஓவரில் முதல் டி20 ஆட்டத்தின் கதாநாயகனான சைஃபர்ட் பவுண்டரியும் சிக்ஸரும் அடுத்தடுத்த பந்துகளில் அடித்தபோது இந்திய ரசிகர்களுக்கு லேசாக நடுக்கம் ஏற்பட்டது. ஆனால் புவனேஸ்வர் வீசிய அடுத்தப் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு வில்லியசம்சன் தொடர்ச்சியாக பவுண்டரிகளை அடிக்க ஆரம்பித்தார். 1 சிக்ஸர் அடித்த நிலையில் தொடக்க வீரர் மன்ரோ 12 ரன்களில் கிருனாள் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 
 
 6-வது ஓவரின் கடைசிப் பந்தில் கிருனாள் பாண்டியாவின் பந்தை எதிர்கொண்டார் மிட்செல். அப்போது, பந்து காலில் பட்டதால் அவர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். உடனே அவர் கள நடுவரின் முடிவை டிஆர்எஸ் மூலம் மேல்முறையீடு செய்தார். அப்போது காண்பிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட் காட்சியில் பந்து பேட்டின் பின்னால் உரசிச் சென்றது நன்குத் தெரிந்தது. இதனால் கள நடுவரின் முடிவை மூன்றாம் நடுவர் மாற்றியமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்னிக்கோ காட்சியில் அதுபோல துல்லியமாக வெளிப்படவில்லை. பந்து பேட்டை உரசாததுபோலவும் இருந்தது. இதனால் மூன்றாம் நடுவருக்கு ஹாட்ஸ்பாட் காண்பித்த காட்சியில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து களநடுவரின் முடிவை ஏற்கும் விதத்தில் மிட்செல் ஆட்டமிழந்ததாக அறிவித்தார். இந்தக் காட்சிகளை மைதானத்தில் உள்ள பெரிய திரையில் பார்த்த மிட்செலும் கேப்டன் வில்லியம்சனும் ஆச்சர்யமடைந்தார்கள். உடனே இதுகுறித்து நடுவர்களிடம் முறையிட்டார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் பரபரப்படைந்தார்கள். இந்த நிலைமையில் இந்திய வீரர்களும் குழப்பமடைந்தார்கள். நடுவர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்தார்கள். மூன்றாம் நடுவர் முடிவு தெரிவித்தபிறகு அதை மாற்றமுடியாது என்பதால் மிட்செல்லை இறுதியாக வெளியேறச் சொன்னார்கள். இந்த நிலையில் அப்பீலை ரோஹித் சர்மா வாபஸ் வாங்குவாரா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. கடைசியில் வேறு எதுவும் செய்ய இயலாது என்பதால் மிகுந்த ஏமாற்றத்துடன் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார் மிட்செல்.

அடுத்தப் பதினோறாவது பந்தில் கிருனாள் பந்துவீச்சில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார் வில்லியம்சன். 10 ஓவர்களின் முடிவில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 60 ரன்களை எடுத்திருந்தது. இதனால் அந்த அணி அடுத்த சில ஓவர்களிலும் நிதானமாக விளையாடி விக்கெட்டுகளைத் தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகுதான் கிராண்ட்ஹோமின் விளாசல் தொடங்கியது. சாஹல் வீசிய 11-வது ஓவரில் முதல் மூன்று பந்துகளில் 2 சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். இன்று சிறப்பாகப் பந்துவீசி வந்த கிருனாள் பாண்டியாவின் ஓவரிலும் தொடர்ச்சியாக இரு சிக்ஸர்கள் அடித்தார். எனினும் இந்த அதிரடி ஆட்டம் அடுத்தச் சில ஓவர்களுக்குக் குறைந்தது. 28 பந்துகளில் 4 சிக்ஸர், 1 பவுண்டரி அடித்த கிராண்ட்ஹோம் 50 ரன்களில் பாண்டியா பந்துவீச்சில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் சுமாராக விளையாடிய நியூஸிலாந்து அணி 15-வது ஓவரின் முடிவில் 121 ரன்கள் எடுத்து வலுவான நிலையை அடைந்ததற்கு கிராண்ட்ஹோம் மட்டுமே காரணம்.

இதேபோல கடைசி 5 ஓவர்களிலும் நியூஸிலாந்து அணி அதிரடியாக விளையாடுமா என்கிற எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. மறுபக்கம் விக்கெட்டுகள் விழுந்தபோது பொறுப்புடன் விளையாடி வந்த டெய்லர், 42 ரன்களில் விஜய் சங்கரின் அற்புதமான ஃபீல்டிங்கினால் ரன் ஆவுட் ஆனார். கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் கலீல் அஹமது.

கடைசியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இந்தியத் தரப்பில் கிருனாள் 3 விக்கெட்டுகளும் கலீல் 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.