ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை: ஐபிஎல் ஏலத்தில் ரூ.15.50 கோடிக்குத் தேர்வான கம்மின்ஸ்!

ஐபிஎல்-லில் கிடைக்கும் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. என் காதலி உடனே சொன்னார்...

News image
Updated On :25 டிசம்பர் 2019, 5:34 am

கொல்கத்தாவில் சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் கலந்துகொண்டார்கள். 73 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்கிற நிலைமையில் 8 அணிகளும் சேர்ந்து 62 வீரர்களை மட்டுமே தேர்வு செய்தன. ஆஸி. வேகப்பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸை ரூ. 15.50 கோடிக்குத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ். இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வானவர் என்கிற பெருமையை அடைந்தார் கம்மின்ஸ். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்குத் தேர்வான வெளிநாட்டு வீரர் என்கிற சாதனையையும் படைத்தார்.

பாக்ஸிங் டே டெஸ்டில் பங்குபெறும் கம்மின்ஸ், இதுகுறித்து கூறியதாவது:

ஐபிஎல்-லில் கிடைக்கும் அந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. என் காதலி உடனே சொன்னார், நம் நாய்க்கு நிறைய விளையாட்டுப் பொருள்களை வாங்கலாம் என்றார். இந்த அதிகப் பணத்தால் நான் மாறக்கூடாது என நினைக்கிறேன். நல்லவேளையாக, என்னைச் சுற்றி நல்ல மனிதர்கள் உள்ளார்கள். நான் இன்னமும் கிரிக்கெட் விளையாடுவதற்குக் காரணம், நான் அதை மிகவும் விரும்புவதால் தான். நடந்த அனைத்துக்கும் நான் மிகவும் கொடுத்து வைத்தவன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.