ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கடந்த பத்தாண்டுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின்: கங்குலி உருக்கமான பாராட்டு!

கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்...

News image
Updated On :25 டிசம்பர் 2019, 5:17 am

கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஆர். அஸ்வின்.

ஐசிசி வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் இது.

1. ஆர். அஸ்வின் - 564 விக்கெட்டுகள்
2. ஆண்டர்சன் - 535 விக்கெட்டுகள்
3. ஸ்டூவர்ட் பிராட் - 525 விக்கெட்டுகள்
4. டிம் செளதி - 472 விக்கெட்டுகள்
5. டிரெண்ட் போல்ட் - 458 விக்கெட்டுகள் 

பிசிசிஐ தலைவரும் முன்னாள் வீரருமான செளரவ் கங்குலி, அஸ்வினின் இந்தச் சாதனைக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். என்ன ஒரு பங்களிப்பு. சிலசமயங்களில் இது கவனிக்கப்படுவதில்லை என்கிற எண்ணம் தோன்றுகிறது. அபாரம் என்று கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் மட்டும் சமீபகாலமாக இடம்பெற்று வரும் அஸ்வினுக்கு, வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்டுகளில் வாய்ப்புகள் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய ஒருநாள், டி20 அணிகளில் அவருக்கு இடம் அளிக்கப்படுவதில்லை. கங்குலியின் கருத்துகள் இதனையொட்டியே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.