டிஎன்பிஎல் அணியின் இரு உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை!
இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு டிஎன்பிஎல் அணியும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அதேசமயம் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களைச் சூதாட்டத் தரகர்கள் அணுகியதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்நிலையில் குழு விசாரணையின் முடிவில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் இரு இணை உரிமையாளர்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.
எனினும் இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு டிஎன்பிஎல் அணியும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...