நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இனி ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் ஒரு பகலிரவு டெஸ்ட்: கங்குலி விருப்பம்!

ஒவ்வொரு டெஸ்டிலும் இல்லாமல், ஒரு தொடரில் ஒரு டெஸ்டாவது பகலிரவு டெஸ்டாக இருக்கவேண்டும்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:23 pm

எழில்

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி சமீபத்தில் பங்கேற்றுள்ளது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடைபெற்றது. இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் ஒரு பேட்டியில் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி கூறியதாவது:

பகலிரவு டெஸ்ட் குறித்து நான் மகிழ்ச்சியாக உள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டை இது முன்னகர்த்திச் செல்லும். ஒவ்வொரு டெஸ்டிலும் இல்லாமல், ஒரு தொடரில் ஒரு டெஸ்டாவது பகலிரவு டெஸ்டாக இருக்கவேண்டும். கொல்கத்தா பகலிரவு டெஸ்ட் குறித்த என்னுடைய அனுபவங்களை பிசிசிஐ நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொள்வேன். இதர மைதானங்களிலும் பகலிரவு டெஸ்ட் நடத்தப்படும். வெறும் ஐந்தாயிரம் ரசிகர்கள் முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட யாரும் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.