நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கி அமைச்சர் ரிஜிஜூ பாராட்டு

இந்தியா வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு புதுதில்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:56 am

Raghavendran

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக மகளிர் பாட்மிண்டன் சாம்பியன் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ஒகுஹாரவை 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து.

உலக சாம்பியன் பட்டம் வென்ற பிறகு திங்கள்கிழமை நள்ளிரவு இந்தியா வந்தடைந்த பி.வி.சிந்துவுக்கு புதுதில்லி விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை மரியாதை நிமித்தமாக செவ்வாய்கிழமை சந்தித்தார் பி.வி.சிந்து. ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கி அமைச்சர் ரிஜிஜூ பாராட்டினார். அப்போது அவரது பயிற்சியாளரும் பாட்மிண்டன் வீரருமான கோபிசந்த் உடனிருந்தார். 

இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் ரிஜ்ஜு ட்விட்டரில் பதிவிட்டதாவது, ''உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து, உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை சந்திப்பதில் மிகவும் பெருமையடைகிறேன். இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்களை குவிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.