தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ரோஹித் சர்மாவை டெஸ்ட்டில் தொடக்க வீரராகக் களமிறக்கவும்: செளரவ் கங்குலி யோசனை!

உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்குக் கிடைத்த நல்ல ஃபார்மைத் தொடரச் செய்து அவரை இந்திய டெஸ்ட் அணியில்...

News image
Updated On :22 ஆகஸ்ட் 2019, 10:55 am

இந்திய கிரிக்கெட் அணிக்கு அவ்வப்போது புதிய யோசனைகளை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தருவதுண்டு. அதைக் கேட்டு கோலியும் சாஸ்திரியும் நடக்கவேண்டும் என்று அவசியமில்லை. இவர்கள் பாட்டுக்குச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நமக்கும் சுவாரசியமாக இருக்கும். அப்படியொரு யோசனையை முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி முன்வைத்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தரமாக இடம்பெறப் போராடும் ரோஹித் சர்மாவின் நிலை குறித்து ஒரு புதிய யோசனையை வழங்கியுள்ளார் செளரவ் கங்குலி. ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணிக்கு, ரஹானேவைத் தேர்வு செய்வதா இல்லை ரோஹித் சர்மாவைத் தேர்வு செய்வதா என்பதுதான் முக்கிய முடிவாக இருக்கும். உலகக் கோப்பைப் போட்டியில் ரோஹித் சர்மா அபாரமான ஃபார்மில் இருந்தார். ஆனால் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் அவர் அவ்வளவு சரியாக விளையாடவில்லை. ரஹானே, ஆஸ்திரேலியாவில் வழக்கம் போல விளையாடவில்லை. 

என்னுடைய யோசனை என்னவென்றால் - உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுக்குக் கிடைத்த நல்ல ஃபார்மைத் தொடரச் செய்து அவரை இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க வீரராகக் களமிறக்கவேண்டும். இதன்மூலம் ரஹானே நடுவரிசையில் இடம்பெற்று, தொடர்ந்து அணிக்கு உதவியாக இருக்கவேண்டும் என்று தன்னுடைய யோசனையைக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.