தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

தேர்வுக்குழுத் தலைவராக கும்ப்ளேவை நியமிக்க வேண்டும்: சேவாக் விருப்பம்!

அதுபோன்ற ஒரு நம்பிக்கையை வீரர்களிடம் ஏற்படுத்துவதால், அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக...

News image
Updated On :21 ஆகஸ்ட் 2019, 10:19 am

இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வுக்குழுத் தலைவராக அனில் கும்ப்ளேவை நியமிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

கும்ப்ளேவை கேப்டனாக நியமித்தபோது, என்னுடைய அறைக்கு வந்து, உனக்கு எப்படி விருப்பமோ அதுபோல விளையாடு. அடுத்த இரு தொடர்களுக்கு உன்னை நீக்கமாட்டோம் என்று கூறினார். அதுபோன்ற ஒரு நம்பிக்கையை வீரர்களிடம் ஏற்படுத்துவதால், அவரை இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகத் தேர்வு செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். 

உலகக் கோப்பை தோல்வி குறித்து சேவாக் கூறியதாவது: அரையிறுதியில் 5-ம் நிலை வீரராக தோனி களமிறங்கியிருக்கவேண்டும். அதற்குப் பின்னால் பாண்டியா விளையாட வந்திருக்கலாம் என்றவர் மே.இ. தீவுகள் அணிக்கு எதிரான தொடர் குறித்தும் பேசியுள்ளார். இந்திய அணி நான்கு பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினால் மட்டுமே ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் கிடைக்கும். சமீபகாலமாகச் சரியாக விளையாடாமல் போனாலும் ராஹானேவைத்தான் நான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.