தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விஜய் ஹஸாரே கோப்பை: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது தில்லி அணி!

சனிக்கிழமையன்று, மும்பை - தில்லி ஆகிய அணிகள் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றன...

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:06 pm

எழில்

ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் தில்லி அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. 

ஜார்க்கண்ட் அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. நான்கு வீரர்கள் வந்த வேகத்தில் திரும்பியதால் 85 ரன்களுக்குள் 6 விக்கெட் இழந்தது ஜார்க்கண்ட் அணி. விராட் சிங் 71 ரன்களும் ஆனந்த் சிங் 36 ரன்களும் எடுத்து அணியின் சரிவைத் தடுத்து நிறுத்தினார்கள். இறுதியில் ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவர்களில் 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சயினி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எளிதான இலக்கென்று களமிறங்கிய தில்லி அணிக்குக் கடும் சவாலை அளித்தார்கள் ஜார்க்கண்ட் பந்துவீச்சாளர்கள். எந்த பேட்ஸ்மேனாலும் அரை சதமெடுக்க முடியவில்லை. நிதிஷ் ராணா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். எனினும் ஒருகட்டத்தில் 149 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்தது தில்லி அணி. அந்தச் சமயத்தில் பவன் நெகியும் சயினியும் பொறுப்புடன் விளையாடி அணியைக் கரை சேர்த்தார்கள். 

ஜார்க்கண்ட் அணி, 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நெகி 39, சயினி 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஜார்க்கண்ட் தரப்பில் ஆனந்த் சிங் 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

இளம் வீரர்கள் பிரித்வி ஷா, ஷிரேயஸ் ஐயர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றுக்கு மும்பை அணி நேற்று தகுதி பெற்றது. இதையடுத்து சனிக்கிழமையன்று, மும்பை - தில்லி ஆகிய அணிகள் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.