அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

மகளிர் ஹாக்கி: 3-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தியது இந்தியா

மகளிர் ஹாக்கி போட்டியில் வலுவான கொரியா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

Raghavendran

மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய, கொரியா அணிகள் இடையிலான ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் வலுவான கொரியா அணியை இந்தியா அபாரமாக வீழ்த்தியது.

போட்டி தொடங்கிய 2-ஆவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை குருஜித் கௌர் அற்புதமாக கோல் அடித்து இந்திய அணியின் கணக்கை துவக்கி வைத்தார். பின்னர் 14-ஆவது நிமிடத்தில் தீபிகா 2-ஆவது கோலை பதிவு செய்தார்.

இதையடுத்து இந்திய அணி கொரியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. மேலும் சிறப்பான தடுப்பாட்டத்தையும் வெளிப்படுத்தியதால் கொரிய வீராங்கனைகள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். 

இந்நிலையில், 47-ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பூணம் ராணி ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் அசைக்க முடியாத முன்னிலைப் பெற்றது. கடைசியாக கொரிய வீராங்கனை மீ ஹியூன் பார்க் 57-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு ஆறுதல் கோல் அடித்தார்.

இதனால் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.