சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா வீரர்கள் இடையே ஓய்வு அறையில் லடாய்

முதல் டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், வீரர்கள் ஓய்வு அறையில்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:24 pm

Raghavendran

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத இப்போட்டியில் இரு அணி வீரர்களும் முட்டிக்கொண்டனர். குறிப்பாக ஆஸ்திரேலிய துவக்க வீரர் டேவிட் வார்னர் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் லயன் நடந்துகொண்டது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

களத்தில் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸை ரன்-அவுட் செய்த பின்னர் ஆஸி. வீரர் லயன் அந்தப் பந்தை அவர் மீது படும்படி வீசிச் சென்று சக வீரர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வார்னர், லயன் ஆகியரது பேச்சு அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் சரியாகப் பதிவாகவில்லை.

இந்நிலையில், 4-ஆம் நாள் தேநீர் இடைவேளையின் போது வீரர்களின் ஓய்வு அறையில் ஆஸி. வீரர் டேவிட் வார்னர், தென் ஆப்பிரிக்க கீப்பர் டி காக் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட சக ஆஸி. வீரர்கள் ஸ்மித், கவாஜா ஆகியோர் வார்னரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இக்காட்சி அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இவ்விகாரம் முழுவதும் தற்போது சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) கவனத்துக்குச் சென்றுள்ளது. இதில் வார்னர் மற்றும் லயன் ஆகியோர் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது, எதிரணி வீரர்களை கோபப்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபட்டது போன்றவை நிரூபிக்கப்பட்டால் 2.1.7 விதிகளின் அடிப்படையில் கடுமையான தண்டனை வழங்கும் நிலை ஏற்படும்.

இதுபோன்று எதிரணி வீரர்களுடன் தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடுவது டேவிட் வார்னருக்கு ஒன்றும் புதிதல்ல. முன்னதாக, 2014-ல் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற தொடரின் போது வானொலி பேட்டி ஒன்றில் அப்போதைய தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ், பந்தினை சேதப்படுத்தியதாகக் கூறி பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்ததால் டேவிட் வார்னருக்கு ஐசிசி அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.