ஏலத்தின் போது ஒரு அணியை மட்டுமே தேர்வு செய்தார்கள். கொல்கத்தாவுக்கு என ஒரு தனித்தன்மையும், பாரம்பரியமும் உள்ளது. இந்த அணியை வழிநடத்தக்கூடிய நிலையில் பலர் இருந்தாலும், அதை சரியாக வழிநடத்துபவரை தேர்வு செய்வதில் அவர்கள் கவனமாக இருந்தனர். அதற்கு நான் சரிபட்டு வருவேனா என்பதை ஆராய்ந்த பின்னரே இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வயதில் உள்ள அனுபவத்தைக் கொண்டு ஒரு வீரனாகவும், சிறந்த தலைவனாகவும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை அவர்கள் என்மீது வைத்துள்ளனர். அதனால் தான் என்னைத் தேர்வு செய்தனர்.