2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா, வாஷிங்டன் சுந்தர் நீக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:06 pm

Raghavendran

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிகளின் போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.

பந்தை தடுக்க முயன்ற போது அவரது இடதுகை விரலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு விரல் முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் டி20 அணியில் இருந்து பும்ரா நீக்கப்பட்டார். மேலும் ஒருநாள் தொடரில் அவர் இடம்பெறுவதும் கேள்விக்குரியாகியுள்ளது. 

அவருக்கு பதிலாக இந்திய ஏ அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹர், இந்திய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதுபோல பயிற்சியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாற்று வீரர்களாக ஒருநாள் அணியில் அக்ஷர் படேல் மற்றும் டி20 அணியில் க்ருணால் பாண்டியா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கூட தற்போது இந்திய ஏ அணியில் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

க்ருணால் பாண்டியா, தற்போது இந்திய அணியில் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழும் ஹார்திக் பாண்டியாவின் மூத்த சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், மாற்றம் செய்யப்பட்ட இந்திய டி20 அணியின் விவரம் பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், க்ருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், தீபக் சஹர், ஹார்திக் பாண்டியா, சித்தார்த் கௌல், உமேஷ் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.