தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாகிஸ்தான் அணியில் மாற்றம் தேவை: நியூஸி. படுதோல்விக்குப் பின் இன்ஸமாம் உல் ஹக் பேட்டி

நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் மாற்றம் தேவை என முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:16 pm

Raghavendran

சர்ஃப்ராஸ் அஹமது தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை வென்றது. இதையடுத்து நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-5 என வயிட்-வாஷ் தோல்வியைத் தழுவியது. இதுகுறித்து அந்த அணியின் முன்னாள் வீரர்கள் விமரிசித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய தேர்வுக்குழுத் தலைவருமான இன்ஸமாம் உல் ஹக் தெரிவித்ததாவது:

ஒரு அணி இதுபோன்ற மோசமான தோல்வியை அடைகிறது என்றால் அதில் நிச்சயம் மாற்றம் தேவை. இனி வரும் காலங்களில் இதுபோன்ற மோசமான தோல்விகளை தவிர்க்க அதிக அளவிலான ஒருநாள் உள்ளூர் போட்டிகளை நடத்திட வேண்டும். பாகிஸ்தானில் தற்போது ஒரேயொரு ஒருநாள் தொடர்தான் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலை மாறவேண்டும்.   

டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை போட்டிகளிலும் வேறு மாதிரியான அணுகுமுறை தேவை. இது அனைத்திலும் சிறப்பாக செயல்படும் வகையில் வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்வது மிகவும் அவசியமாகும். 

இறுதியாக களமிறங்கும் வீரர்களை தேர்வு செய்வது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தான். இருந்தாலும் நான் எனது யோசனகளையும் தெரிவிப்பேன். இருந்தாலும் அந்த நேரம் ஆடுகளத்தின் தன்மை தான் ஆடும் லெவனை தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.