வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ரன் குவிப்பாரா ரோஹித் ஷர்மா? நாளை 5-ஆவது ஒருநாள்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-ஆவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:13 pm

Raghavendran

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-ஆவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபத்தின் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. 

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு 4-ஆவது பிங்க் ஓடிஐ-யில் த்ரில் வெற்றிபெற்று தடை போட்டது தென் ஆப்பிரிக்கா.

இதையடுத்து 5-ஆவது போட்டியில் வெற்றிபெற்று முதன்முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சிபெற்று வருகிறது. அதுபோல அடுத்த 2 போட்டியிலும் வென்று தொடரை சமன் செய்ய தென் ஆப்பிரிக்க அணி ஆர்வம் காட்டுகிறது.

இந்திய அணியின் பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி மற்றும் துவக்க வீரர் ஷிகர் தவன் சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் பெரும்பாலான ரன்களைக் குவித்து வருகின்றனர். இந்திய அணியின் பேட்டிங் பெரும்பாலும் இவர்கள் இருவரை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், இந்த தொடர் முழுவதுமே மற்றொரு துவக்க வீரரான ரோஹித் ஷர்மா தொடர்ச்சியாக ஏமாற்றத்தை அளித்து வருகிறார். 

இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் முறையே 20, 15, 0 மற்றும் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரபாடா பந்துவீச்சில் திணறி தனது விக்கெட்டுகளை பறிகொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டைச் சதம் கண்டுள்ள ரோஹித், 5-ஆவது போட்டியிலாவது ரன்குவிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.

அதேசமயம் அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நடுவரிசையிலும் ரஹானேவின் ஆட்டமும் ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. ஹார்த்திக் பாண்டியாவின் பங்களிப்பும் பெரிய அளவில் இல்லை. முக்கிய கட்டத்தில் தோனியின் பங்களிப்பு குறிப்பிடும் வகையில் மட்டுமே அமைகிறது. 

பந்துவீச்சில் முதல் 3 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப், சாஹல் ஜோடிக்கு 4-ஆவது போட்டியில் சிறிய சரிவு ஏற்பட்டது. ஆனாலும் 5-ஆவது ஒருநாள் நடைபெறும் ஆட்டம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இவர்கள் மீண்டும் மிரட்டத் துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புவனேஸ்வர் குமார், பும்ரா ஜோடியின் பந்துவீச்சும் நன்றாகவே அமைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் திரும்பியுள்ளது அந்த அணியின் இளம் வீரர்களுக்கு புதிய வேகத்தையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் இந்த போட்டியிலும் கடும் சவால் அளிக்கும் விதமாகவே செயல்படுவார்கள். அந்த அணியின் பந்துவீச்சில் ரபாடா, மோரிஸ் போன்றோர் பலம் சேர்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.