வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இம்ரான் தாஹீர் மீது இனவெறித் தாக்குதல்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹீர் மீது இனவெறித் தாக்குதல் நடைபெற்றது குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:13 pm

Raghavendran

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹீர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாவது:

4-ஆவது ஒருநாள் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியில் இம்ரான் தாஹீர் இடம்பெறவில்லை. இருப்பினும் அவர் 12-ஆவது வீரராக செயல்பட்டார். அப்போது ஒவ்வொரு முறையும் அவர் இதர வீரர்களுக்காக குடிநீர் கொண்டு வருகியைில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

வீரர்களின் ஓய்வு அறையின் அருகில் உள்ள பார்வையாளர்கள் மையத்தில் இருந்த நபர் ஒருவர் இச்செயலை தொடர்ந்து செய்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் தாஹீர் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.

மேலும் அந்த நபருடன் இம்ரான் தாஹீர் கைகலப்பில் ஈடுபட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆனால் அதுபோன்ற எந்த சம்பவமும் அங்கு நடைபெறவில்லை. இதுதொடர்பாக அந்த காவலர்களுடன் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். 

முதலாவதாக ஐசிசி விதிகளின்படி ஆடுகளத்தில் வீரர்களுக்கு யாராவது தேவையற்ற இடர்பாடுகளை ஏற்படுத்தினால், அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவர். கூடிய விரைவில் அந்த நபர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றிருந்தது.

முன்னதாக 2014-ம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின் போதும் இம்ரான் தாஹீர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதுபோல கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது மனுகா ஓவல் மைதானத்திலும் ஒரு பகுதியிலிருந்த ரசிகர்கள் கூட்டம் தாஹீரை நோக்கி இனவெறி வாசகங்களை கட்டவிழ்த்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.