நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

காமன்வெல்த் 2018:  மேரி கோம் அரையிறுதிக்கு முன்னேற்றம்

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அரையிறுதிச் சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:41 pm

Raghavendran

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அரையிறுதிச் சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார்.

21-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வரிசையில் 94 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் தாக்கூர் வெண்கலம் வென்று அசத்தினார். 

மகளிர் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரி கோம் (வயது 35), 48 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் குத்துச்சண்டை பிரிவில் இந்திய அணிக்கு ஒரு பதக்கம் உறுதியானது. இருப்பினும் மேரி கோம் இறுதிப் போட்டியிலும் வென்று தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோல ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் விகாஸ் கிருஷ்ணன் 75 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முஹம்மது அனாஸ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.