திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கோலி சதம், போல்ட் 4 விக்கெட்: நியூஸிலாந்துக்கு 281 ரன்கள் வெற்றி இலக்கு

மும்பையில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 280 ரன்கள் எடுத்தது. விராட் கோலி சதமடித்தார். ட்ரென்ட் போல்ட் 4 விக்கெட் வீழ்த்தினார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 5:56 pm

Raghavendran

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இது விராட் கோலி விளையாடும் 200-ஆவது ஒருநாள் போட்டியாகும். கடந்த ஆட்டத்தில் விளையாடிய அணியில் இருந்து அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே ஆகியோர் நீக்கப்பட்டு ஷிகர் தவன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரன் குவிக்கத் திணறியது. துவக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா 20, ஷிகர் தவன் 9 ரன்களுடன் ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பின்னர் வந்த கேதர் ஜாதவ் 12 ரன்களுடன் பெவிலியன் திரும்ப கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 4 பவுண்டரிகளின் உதவியுடன் 37 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய தோனி 25, ஹர்திக் பாண்டியா 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் நங்கூரமாய் நின்ற விராட் கோலி சதமடித்தார். தனது 200-ஆவது ஒருநாள் போட்டியில் சதமடித்து சாதனை படைத்தார்.

மொத்தம் 125 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களின் உதவியுடன் 121 ரன்கள் குவித்து 49.2 ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய புவனேஸ்வர் குமார் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 26 ரன்களை விளாசி கடைசி பந்தில் அவுட்டானார்.

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் ட்ரென்ட் போல்ட் 4, டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.