பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஐ.சி.சி டெஸ்ட் தர வரிசை பட்டியல்: இந்தியா மீண்டும் 'நம்பர் ஒன்'!    

உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியா 123 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தினை பிடித்திருக்கிறது.

News image
Updated On :18 மே 2017, 12:59 pm

துபாய்: உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்தியா 123 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தினை பிடித்திருக்கிறது.

உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிடுகிறது. இந்த ஆண்டுக்கான புள்ளி பட்டியலானது வருடாந்திர கணக்கீட்டுக்குப் பிறகு இன்று வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் விராத் கோலி தலைமையலான் இந்திய அணி 123 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தினை பிடித்திருக்கிறது. 117 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டாம் இடத்தினை பிடித்திருக்கிறது. ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியானது 100 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து (99) நான்காமிடத்திலும், நியூசிலாந்து (96) ஐந்தாமிடத்திலும், பாகிஸ்தான் (93) ஆறாமிடத்திலும், இலங்கை (91) ஏழாமிடத்திலும், மேற்கிந்திய தீவுக ள் அணி (75)  எட்டாமிடத்திலும், இறுதியாக வங்கதேசம் (69) ஒன்பதாமிடத்திலும் உள்ளன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.