கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்: யுவ்ராஜ் விருப்பம்

இங்கிலாந்தில் விளையாடுவது என்பது இந்தியாவில் விளையாடுவதுபோல...

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:30 pm

IANS

சாம்பியன்ஸ் டிராபி ஜூன் 1 முதல் 18 வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. 

இந்தப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இடம்பெற்ற யுவ்ராஜ் சிங், சாம்பியன்ஸ் டிராபி போட்டி குறித்து கூறியதாவது: 

ஐசிசி போட்டியில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்காக நல்லமுறையில் பங்களிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளேன். இந்திய அணி கடினமான பிரிவில் உள்ளது. ஆனால் உள்ளூர் சீசனில் அற்புதமாக விளையாடிய இந்திய அணி தற்போது மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு அடுத்தடுத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்ற அணியாக இந்திய அணி இருக்கும். இங்கிலாந்தில் விளையாடுவது என்பது இந்தியாவில் விளையாடுவதுபோல. அங்கு ரசிகர்களின் ஆதரவு ஏராளமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.