தியோதர் டிராபி: தமிழகம் 303 ரன்கள் குவிப்பு! தினேஷ் கார்த்திக் சதம்!
91 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.


விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 'பி' - தமிழக அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.
ரஞ்சி, விஜய் ஹசாரே மட்டுமில்லாமல் இந்த தியோதர் டிராபியிலும் சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், இன்றைய இறுதி ஆட்டத்தில் சதமெடுத்தார். அதிரடியாக ஆடிய அவர் 76 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். பிறகு 91 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நான்காவதாகக் களமிறங்கிய ஜெகதீசன் 55 ரன்கள் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...