ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

ஐபிஎல்: ஆரம்ப ஆட்டங்களில் இருந்து கோலி விலகல்?

கோலியின் பேட்டியை வைத்துப் பார்க்கும்போது பெங்களூர் அணியின் ஆரம்ப ஆட்டங்களில் கோலி இடம்பெற வாய்ப்பில்லை

News image
Updated On :28 மார்ச் 2017, 7:29 am

ராஞ்சியில் நடைபெற்ற 3-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸின்போது பவுண்டரியைத் தடுக்க முயன்ற இந்திய கேப்டன் விராட் கோலிக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஞ்சி டெஸ்டிலேயே அவர் களம் இறங்கினார். எனினும், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

காயத்தின் காரணமாக அவர் தர்மசாலா டெஸ்ட் போட்டியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் கோலி, ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தர்மசாலா டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார் என்கிற விமரிசனங்களும் எழுந்தன. இந்நிலையில் தனது காயம் குறித்து இன்று கோலி கூறியதாவது: ஆடுகளத்தில் நான் நூறு சதவிகித உடற்தகுதியுடன் இருப்பதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று தகவல் கூறியுள்ளார்.

கோலி, பெங்களூர் அணியின் கேப்டனாக உள்ளார். ஐபிஎல் போட்டி ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கவுள்ளது. முதல் ஆட்டமே ஹைதராபாத் - பெங்களூர் அணிகளுக்கு இடையேதான். ஹைதராபாத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

கோலியின் பேட்டியை வைத்துப் பார்க்கும்போது பெங்களூர் அணியின் ஆரம்ப ஆட்டங்களில் கோலி இடம்பெற வாய்ப்பில்லை என்று அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.