இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்ட இந்திய அணி, 2-ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டதன் மூலம் நம்பிக்கை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் ராஞ்சியில் நடைபெறும் 3-ஆவது போட்டியில் வெல்வதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்பில் உள்ளது. 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டதால், இந்தப் போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்திய அணியில் முகுந்துக்குப் பதிலாக விஜய் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடக்க வீரர்களான வார்னரும் ரென்ஷாவும் கடகடவென ரன்கள் எடுக்க ஆரம்பித்தார்கள். 10-வது ஓவரில் 50 ரன்களை எடுத்தார்கள். ஆனால் அதே ஓவரில் பந்துவீசிய ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 19 ரன்களில் வெளியேறினார் வார்னர். இந்த் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரென்ஷா 44 ரன்கள் எடுத்த நிலையில் அரை சதத்தைத் தவறவிட்டார். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்பின்னர் ஷேன் மார்ஷ், புஜாராவின் அற்புதமாக கேட்சினால் இரண்டே ரன்களில் பெவிலியன் திரும்பினார். அஸ்வின் இந்த விக்கெட்டை வீழ்த்தினார்.
டாஸ் வென்றபிறகும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை முதல் நாளின் முதல் பகுதியில் இழந்துள்ளது. உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது.
உணவு இடைவேளைக்குப் பிறகு ஸ்மித் வழக்கம்போல சிறப்பாக விளையாடினார். 104 பந்துகளில் அரை சதம் அடித்தார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிவந்த ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்களில் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 80, மேக்ஸ்வெல் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


