தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ரன்கள் எடுக்காததால் கோலி வெறுப்படைந்துள்ளார்: மிட்செல் ஜான்சன்

ஒவ்வொரு வீரரும் அவுட் ஆகும்போது அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:13 am

எழில்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித். இதையடுத்து டிஆர்எஸ் மூலம் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக எதிர்முனையில் நின்ற ஹேண்ட்ஸ்காம்பிடம் ஆலோசித்த ஸ்மித், அதன்பிறகு "டிரெஸ்ஸிங்' அறையில் இருந்த சகவீரர்களிடம் சைகை மூலம் ஆலோசனை கேட்டார். அதற்கு இந்திய கேப்டன் கோலி எதிர்ப்புத் தெரிவிக்க, ஸ்மித் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இரு நாட்டு வாரியங்களும் அறிக்கைகள் மூலம் மோதிக் கொண்டன. அதைத் தொடர்ந்து ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் மீது ஐசிசியிடம் வியாழக்கிழமை புகார் அளித்தது பிசிசிஐ.

இதன்பிறகு பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி சுதர்லேன்ட் ஆகியோர், வியாழக்கிழமை இரவு சந்தித்து இந்த விவகாரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்மித், ஹேண்ட்ஸ்காம்ப் மீதான புகாரை பிசிசிஐ திரும்பப் பெற்றது.

இது தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "இந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளில் கவனம் செலுத்தும் வகையில், டிஆர்எஸ் விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையை இரு நாட்டு வாரியங்களும் பேசி தீர்த்துக் கொண்டன' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் கோலி - ஸ்மித் மோதல் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் பேசிவருகிறார். ஆஸ்திரேலிய இணையத்தளம் ஒன்றுக்கு முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியதாவது:

விராட் கோலி, நிச்சயம் மிகுந்த ஆர்வத்துடன் விளையாடுபவர்தான். ஆனால் அவரால் இந்தத் தொடரில் ரன்கள் குவிக்க முடியாததால் வெறுப்படைந்துள்ளார். அதனால்தான் உணர்ச்சிகளுக்கு இடமளிக்கிறார். ஒவ்வொரு வீரரும் அவுட் ஆகும்போது அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார். அதனால் கேமராவும் அவர்மீது கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு ஆஸி. வீரரும் அவுட் ஆகும்போது, வழியனுப்பதலுக்குரிய சைகை செய்கிறார். இதில் அவர் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.