/

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 184 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 183 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :29 ஜூன் 2017, 12:43 pm

இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 183 ரன்கள் எடுத்துள்ளது.

டெளன்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் முதலில் இருந்தே தடுமாறியது மே.இ. அணி. இதனால் அந்த அணியில் யாரும் அரை சதம் எடுக்கமுடியாமல் போனது. ஹேய்லே மேத்யூஸ் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் மே.இ. அணி 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் தீப்தி சர்மா, பூணம் யாதவ், கெளர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.