ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கேப்டனுக்கு உதவுவதுதான் பயிற்சியாளர் பணி: கோலி - கும்ப்ளே மோதல் குறித்து கங்குலி!

அணியின் கேப்டன்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கவேண்டும். அதற்கு உறுதுணையாகப் பயிற்சியாளர் இருக்கவேண்டும்.

News image
Updated On :1 ஜூன் 2017, 7:00 am

சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், அவருக்கு பொறுப்பு நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ கடந்த வாரம் முதல் வரவேற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், பிசிசிஐ இந்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து கோலி - கும்ப்ளே இடையே மோதல் நிலவுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.

இந்நிலையில் முன்னாள் கேப்டன் கங்குலி இந்த விவகாரம் குறித்து கூறியதாவது:

கும்ப்ளேவுடனான மோதல் குறித்து கோலி என்னிடம் பேசியதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுபோன்ற முக்கியமான போட்டியின்போது இப்பிரச்னை குறித்து பேசுவது சரியல்ல. நான் அவரிடம் ஹலோ மட்டுமே சொன்னேன்.

கோலியும் கும்ப்ளேவும் சண்டை போட்டாலும் போடாவிட்டாலும் முதல் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும். இதுபோன்ற பெரிய போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை விடவும் வலுவானது.

கோலி - கும்ப்ளே இடையே என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் பேச இது சரியான நேரம் இல்லை. ஒரு பயிற்சியாளரின் பணி என்பது கேப்டனுக்கு உதவுவதுதான். அணியின் கேப்டன்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கவேண்டும். அதற்கு உறுதுணையாகப் பயிற்சியாளர் இருக்கவேண்டும். சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி சரியாக விளையாடாவிட்டால் கேப்டன், பயிற்சியாளர் ஆகிய இருவருமே விமரிசிக்கப்படுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.