மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆறாயிரம் ரன்கள்: உலக சாதனை படைப்பாரா மிதாலி ராஜ்?

மிதாலி ராஜின் சாதனையை இன்னொருவர் முறியடிக்க பல வருடங்களாகும்...

News image
Updated On :8 ஜூலை 2017, 7:33 am

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் உலக சாதனை படைப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 191 போட்டிகளில் 5992 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ் 181 போட்டிகளில் 5959 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். எனவே இந்தப் போட்டியில் 34 ரன்கள் எடுத்தால் மிதாலி, அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவிடுவார். 

மேலும் 41 ரன்கள் எடுத்தால் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆறாயிரம் ரன்களைத் தொட்ட முதல் வீராங்கனை என்கிற உலக சாதனையையும் புரிவார். இதனால் இன்றைய போட்டியை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்.

எட்வர்ட்ஸ் இப்போது கிரிக்கெட் விளையாடுவதில்லை. அதேபோல மூன்றாம் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் கிளார்க்கும் 4884 ரன்களுடன் 2005-ல் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது விளையாடுகிற வீராங்கனைகளில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த டெய்லர் 3817 ரன்கள் எடுத்துள்ளார். எனவே மிதாலி ராஜின் சாதனையை இன்னொருவர் முறியடிக்க பல வருடங்களாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.