மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சச்சின் சாதனையை மிஞ்சினார்: விராட் கோலி புதிய உலக சாதனை!

இதற்கு முன்பு சச்சின் 232 இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார்...

News image
Updated On :7 ஜூலை 2017, 5:11 am

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 5-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3- 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36.5 ஓவரில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது. 
விராட் கோலி அபாரமாக விளையாடி சதமெடுத்தார். தினேஷ் கார்த்திக் அரை சதமெடுத்தார். கோலி 111, தினேஷ் கார்த்திக் 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

இதன் மூலம் சேஸிங்கில் அதிக சதமெடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார் கோலி. இதற்கு முன்பு சச்சின் 232 இன்னிங்ஸ்களில் 17 சதங்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். நேற்றைய சதத்தின் மூலம் சேஸிங்கில் 18 சதங்கள் எடுத்து முதலிடத்தை எட்டியுள்ளார் கோலி.

சேஸிங்கில் அதிக சதமெடுத்த வீரர்கள்

18 கோலி (102 இன்னிங்ஸ்) 
17 சச்சின் (232)
11 தில்ஷன் (116)
11 கெய்ல் (139)

28 ஒருநாள் சதங்களைக் கடக்கத் தேவைப்பட்ட இன்னிங்ஸ்கள்

181 கோலி 
259 சச்சின்
314 பாண்டிங்
416 ஜெயசூர்யா

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி

முதலில் பேட்டிங் செய்தபோது: 10 சதங்கள் (79 இன்னிங்ஸ்); சராசரி 42.30
சேஸிங்கில்: 18 சதங்கள் (102 இன்னிங்ஸ்); சராசரி 66.27

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.