பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சிக்ஸர்கள் பறக்குமா? இந்தியாவுடன் விளையாடும் மே.இ. டி20 அணியில் கிறிஸ் கெய்ல்!

கெய்ல் விளையாடுவதால் அந்தப் போட்டிக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது....

News image
Updated On :5 ஜூலை 2017, 7:26 am

வருகிற ஞாயிறு அன்று நடைபெறவுள்ள டி20 போட்டியில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன. இதற்கான மே.இ. அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார். இவர் மே.இ. அணிக்காகக் கடைசியாகக் கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடினார்.

கார்லோஸ் பிராத்வெயிட் கேப்டனாக உள்ள இந்த அணியில் ஒருநாள் கேப்டனான ஹோல்டருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. சிமன்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டி20 அணியில் கெய்ல் இடம்பெற்றுள்ளதால் ஞாயிறு அன்று நடைபெறும் போட்டியில் சிக்ஸர்கள் பறக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். கெய்ல் விளையாடுவதால் அந்தப் போட்டிக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

கிங்ஸ்டனில் நடைபெறும் டி20 போட்டி, இந்திய நேரம் இரவு 9 மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்தியா - மே.இ. அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வியாழன் அன்று கிங்ஸ்டனில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.