விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நான்கரை மாத கர்ப்பத்துடன் விம்பிள்டனில் விளையாடி வரும் வீராங்கனை!

செரீனா வில்லியம்ஸ் போல மேண்டி மின்னலாவும் கர்ப்பக் காலத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில்...

News image
Updated On :5 ஜூலை 2017, 11:09 am

லக்ஸம்பர்க்கைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மேண்டி மின்னல்லா, நான்கரை மாதக் கர்ப்பத்துடன் விம்பிள்டனில் விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த ஃபிரான்செஸா, மேண்டியை 6-1, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்து விம்பிள்டன் போட்டியை விட்டு அவரை வெளியேற்றினார். ஒற்றையர் பிரிவில் வெளியேறினாலும் மேண்டி மகளிர் இரட்டையர் பிரிவிலும் விளையாடவுள்ளார்.

இதுபற்றி 31 வயது மேண்டி கூறியதாவது: இந்த சீசனில் நான் விளையாடும் கடைசிப் போட்டி இது. இவ்வருடக் கடைசியில் எனக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்றார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தன் கணவருடனான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதில் மேண்டியின் வயிற்றை அவருடைய கணவர் முத்தமிடுவதுபோன்று புகைப்படம் அமைந்துள்ளது.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் செரீனா வில்லியம்ஸ். ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது 3 மாத கர்ப்பக் காலத்தில் இருந்துள்ளார். அந்த நிலையிலும் துணிச்சலுடன் போட்டியில் கலந்துகொண்டு சாம்பியனாகவும் ஆகியுள்ளார். அதேபோல மேண்டி மின்னலாவும் கர்ப்பக் காலத்தில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்று கவனம் ஈர்த்துள்ளார்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.