தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

'சென்னையின் எப்சி'  கால்பந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஜான் கிரிகோரி நியமனம்!

'இந்தியன் சூப்பர் லீக்' எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டித் தொடரில் விளையாடும், 'சென்னையின் எப்சி'  கால்பந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக, உலகப்புகழ் பெற்ற பயிற்சியாளர் ஜான் கிரிகோரி...

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:20 pm

IANS

சென்னை: 'இந்தியன் சூப்பர் லீக்' எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டித் தொடரில் விளையாடும், 'சென்னையின் எப்சி'  கால்பந்து அணிக்கு தலைமை பயிற்சியாளராக, உலகப்புகழ் பெற்ற பயிற்சியாளர் ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடரினைப் போன்றே நாடு முழுவதும் இருந்து கால்பந்து அணிகள் பங்கு பெறும் 'இந்தியன் சூப்பர் லீக்' எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டித் தொடரானது 2015-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.

இந்த போட்டித் தொடரில் சென்னையினை பிரதிபலிக்கும் வகையில் 'சென்னையின் எப்சி'  என்ற கால்பந்து அணி பங்கேற்கிறது. ஆரம்ப சீசனில் இந்த அணிக்கு தலைவர் மற்றும் பயிற்சியாளர் என்ற இரண்டு பாத்திரங்களை ஏற்று, இத்தாலி வீரரான மார்கோ மேட்டரசி பணியாற்றினார். அவரது தலைமையில் 2015-ஆம் ஆண்டு சென்னை அணி 'சாம்பியன்' பட்டம் வென்றது.

இந்நிலையில் விரைவில் துவங்கவுள்ள புதிய சீசனில் இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   1972-ஆம் ஆண்டுமுதல் கால்பந்து விளையாடி வரும் கிரிகோரி, வீரராக மட்டும் இன்றி பயிற்சியாளராகவும் சிறப்பாக செயல்பட்டு புகழ்பெற்றவராவார்.

அவரது நியமனம் தொடர்பான அறிவிப்பினை சென்னை அணியின் துணை உரிமையாளரான விட்டா டேனி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார். புதிய பொறுப்பினை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும், வீரர்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாகவும் ஜான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.