நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

49 ரன்களில் ஆல் அவுட்: கோலி கோபம்!

பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:22 pm

எழில்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியைத் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா, 19.3 ஓவர்களில் 131 ரன்களுக்கு சுருண்டது. பெங்களூர் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டைமல் மில்ஸ், பவன் நெகி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பெங்களூர் தோல்வி: பின்னர் ஆடிய பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாக, அந்த அணியின் சரிவு ஆரம்பமானது. இறுதியில் பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் 49 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 9 ரன்கள் எடுத்தார். அந்த அணியில் அனைவருமே ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். கொல்கத்தா தரப்பில் நாதன் கோல்ட்டர் நைல், கிறிஸ் வோக்ஸ், டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கோலி, டிவில்லியர்ஸ், கேதார் ஜாதவ் ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய கோல்ட்டர் நைல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் ஓர் ஆட்டத்தில் 20 விக்கெட்டுகளும் வீழ்ந்தது இது 2-ஆவது முறையாகும். பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே ஐபிஎல் வரலாற்றில் ஓர் அணி எடுத்த குறைந்தபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு ராஜஸ்தான் அணி 2009-ல் பெங்களூருக்கு எதிராக 58 ரன்கள் எடுத்ததே குறைந்தபட்ச ஐபிஎல் ஸ்கோராக இருந்தது.

இந்தத் தோல்வி குறித்து கோலி கூறியதாவது: 

இந்த மோசமான தோல்வி. கவனக்குறைவான பேட்டிங். மனத்தை மிகவும் காயப்படுத்தியுள்ளது. நன்றாக பெளலிங் செய்ததால் இலக்கை எட்டமுடியும் என்றுதான் நினைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. என்னால் இப்போது ஒன்றும் சொல்லமுடியவில்லை. ஆனால் இது ஏற்றுக்கொள்ளமுடியாத தோல்வி. இந்தத் தோல்வியைப் பெரிதாக ஆராய முடியாது. அந்தளவுக்கு மோசம். இதை மறந்துவிட்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்தவேண்டும். இதுபோல மீண்டும் இந்த ஐபிஎல்-லில் விளையாட மாட்டோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.