ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இன்றைய போட்டியில் புணே ஐபிஎல் அணியில் இடம்பிடித்த 17 வயது தமிழக வீரர்!

ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளம் வீரர் என்கிற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றுள்ளார்.

News image
Updated On :22 ஏப்ரல் 2017, 10:54 am

17 வயது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஹைதரபாத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் புணே அணி சார்பாக விளையாடுகிறார்.

புணேவில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்-சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

புணே அணியில் இடம்பெற்றதன் மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளம் வீரர் என்கிற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றுள்ளார். காயத்தால் அஸ்வின் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியதால் அவருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெற்றுள்ளார். 2016-ல் நடைபெற்ற U-19 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காக சுந்தர் விளையாடினார்.

ஹைதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளையும், புணே 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ஹைதராபாத் ஒரு வெற்றியும், புணே ஒரு வெற்றியும் பெற்றுள்ளன.

ஐபிஎல்-லில் விளையாடிய இளம் வீரர்கள்:

17 வயது 177 நாள்கள்: சர்ஃபராஸ் கான் 
17 வயது 179 நாள்கள்: சங்வான் 
17 வயது 199 நாள்கள்: வாஷ்ங்டன் சுந்தர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.