கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

ஐபிஎல்: தொடக்க விழாவில் எமி ஜாக்சன் நடனம்!

ஹைதராபாதில் இன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

News image
Updated On :5 ஏப்ரல் 2017, 10:31 am

வேகம், விறுவிறுப்பு, பரபரப்பு, அதிரடி, ஆக்ரோஷம், சிக்ஸர் மழை என ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவைக்கும் 10-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஹைதராபாதில் இன்று தொடங்குகிறது.

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், கடந்த முறை இறுதிச் சுற்றில் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. 47 நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் 60 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இறுதி ஆட்டம் மே 21-ஆம் தேதி ஹைதராபாதில் நடைபெறுகிறது. டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ், ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த முறை போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளின் சொந்த மைதானங்களிலும் தொடக்க விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 8 அணிகளும் தங்களின் உள்ளூர் மைதானத்தில் முதல் ஆட்டத்தை விளையாடும் தினத்தில் தொடக்க விழா நடைபெறும். ஹைதராபாதில் இன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் பாலிவுட் நடிகை எமி ஜாக்சன் பங்கேற்று நடனமாடுகிறார். வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் என களை கட்ட காத்திருக்கிறது ஹைதராபாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.