ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

நடாலை வீழ்த்தி 91-வது பட்டம் வென்றார் ஃபெடரர்!

ஃபெடரர், இந்த வருடம் மட்டும் மூன்று பட்டங்களை வென்றுள்ளார்.

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 10:44 am

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடைபெற்ற  இறுதிச்சுற்றில் ரோஜர் ஃபெடரர், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மியாமி ஓபன் பட்டத்தை ஃபெடரர் 3-வது முறையாகக் கைப்பற்றியுள்ளார். 

மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் 5-வது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நடால், இதுவரை இங்குப் பட்டம் வென்றதில்லை. 
இந்த ஆண்டில் இவர்கள் இருவரும் மோதிய 2-வது இறுதிச் சுற்று இது. முன்னதாக கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் ஃபெடரரும், நடாலும் மோதினர். அதிலும் ஃபெடரர்தான் வெற்றி பெற்றார். ஒட்டுமொத்தத்தில் நடாலும், ஃபெடரரும் நேருக்கு நேர் மோதிய 37-வது ஆட்டம் இது. இதில் ஃபெடரர் 14 முறையும் நடால் 23 முறையும் வென்றுள்ளார்கள். 

மியாமி பட்டம் ஃபெடரரின் 91-வது பட்டமாகும். தரவரிசையில் 4-ம் இடத்தில் இருக்கும் ஃபெடரர், முதல் இடத்தைப் பிடிக்கப் போராடுவேன் என்று கூறியுள்ளார். காயத்தினால் சில காலம் விளையாடாமல் இருந்த ஃபெடரர், இந்த வருடம் மட்டும் மூன்று பட்டங்களை வென்றுள்ளார். இந்த வருடம் விளையாடிய 20 ஆட்டங்களில் 19-ல் வெற்றிபெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.