ஸ்டிரைக்கில் இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் திமிட்ரி மேஸ்கரன்ஹாஸ். முதல் பந்தில் ரன் ஏதும் இல்லை. 2-வது பந்தை மிட் விக்கெட் திசை நோக்கி தூக்கி அடிப்பார் மேஸ்கரன்ஹாஸ். அதை பியூஷ் சாவ்லா அற்புதமாகப் பிடிக்க அனைவரும் அவுட் என்றே நினைத்தனர். ஆனால், வந்த வேகத்தில் பந்தைப் பிடித்து கட்டுப்பாடு இல்லாமல் சறுக்கியபடியே பவுண்டரி எல்லையைத் தொட்டுவிடுவார் சாவ்லா. இதன்மூலம், துரதிருஷ்டவசமாக அது சிக்ஸராக மாறியது. அது சிக்ஸராக அல்லாமல் விக்கெட்டாக இருந்திருந்தால், அடுத்த 15 நாள்களுக்கு யுவ்ராஜ் சிங் நிம்மதியான தூக்கத்தைப் பெற்றிருப்பார் என்பதுதான் நிதர்சனம்.