தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

மாஸ்டர் படத்தின் பாணியில் பஞ்சாப் அணி சிஎஸ்கேவை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.

News image

படம்: பஞ்சாப் / எக்ஸ்

Updated On :2 மே 2024, 5:45 am

ஐபிஎல் போட்டியின் 49-ஆவது போட்டியில் சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் வென்றது.

முதலில் ஆடிய சிஎஸ்கே 162/7 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் 17.5 ஓவரில் 163 ரன்கள் எடுத்து வென்றது.

இத்துடன் 5 முறை பஞ்சாப் அணி சிஎஸ்கேவை வென்று அசத்தியுள்ளது. அத்துடன் சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 முறை சிஎஸ்கே அணியை பஞ்சாப் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இதற்கு முன்பாக மும்பை அணி சேப்பாகத்தில் 5 முறை வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் சிஎஸ்கே அணியை தமிழ்ப் படங்களின் மீம்ஸ்களால் கிண்டல் செய்து வருகிறது.

குறிப்பாக விஜய், விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படத்தின் காட்சிகளை பதிவிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.

போட்டியை வென்ற பிறகு மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும், “சோலி முடிந்தது” என்பதை பதிவிட்டு சிஎஸ்கே அணியை கிண்டல் செய்து வருகிறது.

அதுமட்டுமின்றி வெற்றிக்கு காரணம் தோனிதான் எனவும் கிண்டல் பதிவுகளை பதிவிட்டு வருகிறது.

சிஎஸ்கே அணி மீதமுள்ள 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.