தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

ஆவேஷம் படத்தின் பாணியில் சிஎஸ்கே வீரர்கள் பகிர்ந்த ரீல்ஸ் வைரலாகி வருகிறது.

News image

படங்கள்: சிஎஸ்கே, ஆவேஷம்/ எக்ஸ்

Updated On :1 மே 2024, 11:14 am

சிஎஸ்கே அணிக்காக இலங்கையை சேர்ந்த மதீஷா பதிரானாவும் வங்கதேச அணியின் வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானும் விளையாடுகிறார்கள்.

சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கும் வங்கதேச அணிக்கும் மோதல் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சமூக வலைதளங்களிலும் இரு நாட்டு ரசிகர்கள் அடித்துகொள்வது வழக்கமாகிவிட்டன.

சமீபத்தில் நடந்த இருதரப்பு கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் ஒருவரையிருவர் கிண்டல் செய்து தங்களது வெற்றிகளை வெளிப்படுத்தி சர்வதேச அளவில் கவனம் பெற்றனர்.

ஆவேஷம் படத்தில் ஃபகத் ஃபாசில் ஒரு ரீல்ஸ் செய்திருப்பார். அதில் சிரிப்பு ஒரு பக்கம், கோபம் மறு பக்கம் என இருக்கும்படி செய்திருப்பார். படத்துக்கு மட்டுமில்லாமல் இந்த ரீல்ஸுக்கும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றன.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் விளையாடும் பதிரானா, முஸ்தஃபிசூர் இந்த ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்திருக்கிறார்கள். இந்த ரீல்ஸுக்கு மிகவும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இரு நாட்டு பிரச்னையை இப்படி அசால்ட்டாக தீர்த்துவிட்டார்களே என ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கூறி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.