தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

பந்து வீச்சாளர்களைக் குறைகூற முடியாது: தோல்வி குறித்து ஹார்திக் பாண்டியா!

ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா நேர்மறையாக பேசியுள்ளார்.

News image
Updated On :28 மார்ச் 2024, 6:19 am

ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா நேர்மறையாக பேசியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277/3 ரன்களைக் குவித்து ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே அதிக ரன்களை எடுத்த அணி என்ற சாதனையை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை அணியின் பந்து வீச்சு மோசமானதாக இருந்ததாக பலரும் விமர்சித்தனர்.

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது:

ஹைதராபாத் இவ்வளவு (277) ரன்கள் அடிப்பார்களென டாஸ் வென்றபோது நான் நினைக்கவில்லை. ஆடுகளம் சிறப்பாக இருந்தது. நீங்கள் எவ்வளவு மோசமாக அல்லது சிறப்பாக பந்து வீசியது என்பது முக்கியமில்லை, 277 என்பது எதிரணியினர் சிறப்பாக பேட்டிங் செய்ததையே குறிக்கிறது. எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினார்கள். பௌலர்களுக்கு இந்த ஆடுகளம் கடினமானது . இரு அணியினரும் 500 ரன்கள் அடித்துவிட்டோம். அந்தளவுக்கு ஆடுகளம் பேட்டிங்கிக்குச் சாதகமானது. அங்கு இங்கு என மாற்றி பந்து வீசியிருக்கலாம். ஆனால், எங்களது அணி இளமையான வீரர்களைக் கொண்டது. நாங்கள் கற்றுக் கொள்கிறோம். சரியான நேரம் அமையும்போது எல்லாம் சரியாக நடக்கும் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.