மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

“தலை நிமிர்ந்திரு வீரனே!”- மும்பை அணியின் இளம் (17) வீரருக்கு பிராவோ ஆதரவு!

மும்பை அணியின் குவேனா மபகாவுக்கு ஆறுதலாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிராவோ பதிவிட்டுள்ளார்.

News image

படங்கள்: பிராவோ / இன்ஸ்டாகிராம்

Updated On :28 மார்ச் 2024, 7:10 am

மும்பை அணியின் இளம் வீரர் குவேனா மபகாவுக்கு ஆறுதலாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிராவோ பதிவிட்டுள்ளார்.

தென்னாப்ப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதானா குவேனா மபகா யு-19 போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். அதனால், இலங்கை வீரர் மதுஷனக்காவுக்கு காயம் என்பதால் அவருக்கு மாற்றாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வானார் குவேனா மபகா.

முதன்முதலாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான குவேனா மபகா ஹைதராபாத்துக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 66 ரன்களை வாரி வழங்கினார்.

இவருக்கு ஆறுதலாக முன்னாள் பிரபல மேற்கிந்திய தீவுகள் வீரரும் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளருமான டிவைன் பிராவோ ஆறுதலாக பதிவிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ராவோ கூறியதாவது:

தலை நிமிர்ந்து இரு வீரனே! குவேனா மபகா, நீ நிச்சயமாக மீண்டு வருவாய். இந்த ஒரு மோசமான போட்டியினால் உன்னை நீயே சந்தேகப்படாதே. இது மிகப்பெரிய சவால் உனக்கு. தொடரில் போகப்போக நீ சிறப்பாக செயல்படுவாய்! எனக் கூறியுள்ளார்.

பல கிரிக்கெட் பிரபலங்களும் குவேனா மபகாவுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர். மும்பை அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.